×

வரும் நாடாளுமன்ற தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி 300 தொகுதிகளில் வெற்றி பெறும்: க.சுந்தர் எம்எல்ஏ பேச்சு

மதுராந்தகம்: காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் உத்திரமேரூரில் நேற்று நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் இனிய அரசு தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் டி.வி.கோகுலக்கண்ணன், மலர்விழி குமார், மாவட்ட பொருளாளர் சன்பிராண்ட் ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ வரவேற்றார். அப்போது அவர் பேசுகையில்,’வாக்காளர் பட்டியலை சரி பார்க்கவேண்டும், அதில் திமுகவினர் பெயர் விடுபட்டிருந்தால் வாக்காளர்களை சேர்ப்பது, புதிய வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இணைப்பது உள்ளிட்ட பணிகளை நிர்வாகிகள் செய்து முடிக்கவேண்டும். மோடி எதிர்ப்பலை தொடர்ந்து 5 ஆண்டு காலமாக இருந்து வருகிறது.

ஆகவேதான் கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றிபெற்று புத்துணர்ச்சியுடன் செயல்பட்டு வருகிறது. இந்தியா கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் 300 இடங்களுக்கு மேல் வெற்றிபெறும். திமுக தலைவர் யாரை பிரதமர் என சொல்கிறாரோ அவர்தான் பிரதமராக முடியும். காஞ்சிபுரத்தில் வரும் 15ம்தேதி முதலமைச்சர் மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் வழங்க வருகை தரும்போது மாவட்ட கழகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கவேண்டும். கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடக்க விழா அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் நடக்கிறது. இதில் அனைவரும் கலந்து கொள்ளவேண்டும்’ என்றார்.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தொடங்கி வைக்க வருகை தரும் முதலமைச்சருக்கு வழிநெடுகிலும் வரவேற்பு அளிப்பது, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி மகளிர் மனதில் இடம்பிடித்த முதல்வருக்கு காஞ்சி தெற்கு மாவட்டம் நன்றி தெரிவிக்கிறது. 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் 17 லட்சம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு திட்டத்தை வழங்கி வரலாற்றில் இடம் பிடித்துள்ள முதலமைச்சருக்கு வாழ்த்துகளையும் நன்றியையும் மாவட்ட கழகம் தெரிவித்துக்கொள்கிறது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் எம்எல்ஏ சி.வி.எம்.பி.எழிலரசன், காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி, மாநில இளைஞரணி துணை செயலாளர் அப்துல் மாலிக், செயற்குழு உறுப்பினர்கள் நாகன், நாராயணன், சுகுமார், பொதுக்குழு உறுப்பினர்கள் வெளிக்காடு ஏழுமலை, சசிகுமார், ராஜேந்திரன், மாநகர செயலாளர் தமிழ் செல்வன், நகர செயலாளர் குமார், ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார், கெ.ஞானசேகரன், சாலவாக்கம் டி.குமார், சேகர், குமணன், கே.கண்ணன், ஜி.தம்பு, பி.எச்.சத்தியசாய், பென்.சிவக்குமார், கே.எஸ்.ராமச்சந்திரன், வி.ஏழுமலை, இ.சரவணன், ஏ.சிற்றரசு, எம்.எஸ்.பாபு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ், மாணவரணி அமைப் பாளர் டைகர் குணா, பேரூர் செயலாளர்கள் பாரிவள்ளல், பாண்டியன், சுந்தரமூர்த்தி, எழிலரசன், செங்கல்பட்டு மாவட்ட மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் ராஜா ராமகிருஷ்ணன், ஜெயலட்சுமி மகேந்திரன், மாலதி செல்வராஜ், தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் ஜியாவுதீன், மீனவரணி அமைப்பாளர் பாரத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து, உத்திரமேரூர் ஒன்றிய, பேரூர் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் ஒன்றிய அவைத்தலைவர் சுப்பராயன், பேரூர் அவைத்தலைவர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு பேசினார். ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், பேரூராட்சி தலைவர் சசிகுமார் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

 

The post வரும் நாடாளுமன்ற தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி 300 தொகுதிகளில் வெற்றி பெறும்: க.சுந்தர் எம்எல்ஏ பேச்சு appeared first on Dinakaran.

Tags : India ,alliance ,K.K. Sunderar ,MLA ,Madurandagam ,Kanchipuram Southern District ,Kanchipuram ,Uttramerur ,Head ,Government ,District of Happy ,K.K. Sunderr ,
× RELATED மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு...